Thursday, October 21, 2010

veeramanickam

வியப்பூட்டும் விஷயங்கள்



திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன..அவைகளில் சில...


1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.


2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்பு ஏற்படுவதில்லை.


3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.


4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன
திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் ..ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

Electrical Accessories pcb


Electrical Accessories
We are one of the highly reputed dealers and suppliers of the unmatched quality of Electrical Accessories such Wiring Accessories, Conduit Fittings, Terminal Blocks, Electrical Parts, Electrical Components and Electrical Switch Parts. These electrical products are available at highly affordable price for the complete satisfaction of the customers. Our all products are obtained from highly established companies who never compromise with the quality of products at any cost.

Our products range in electrical accessories include following

Wiring Accessories
Earthing Accessories
HRC Fuse Connectors
Insert For PVC Moulding Parts and Conduit Fittings
Neutral Links and Terminal Blocks
Electrical Switch Parts
General Brass Electrical Accessories
Panel Board Accessories
Our products range in earthing equipment includes following :

Coupler
Rod to Tape Clamp
Test Clamp
Oblong Test Clamp
Square Tape Clamp
DC Tape Clip
Tee Clamp
Rod to Tape Coupling
Our products range in electrical switch parts includes the following :
5 Amp Two Pin Socket with Spring
5 Amp Two Pin Socket Heavy Type
5 X 5 Amp Universal Combine Socket
5 Amp Earthing Socket with Spring
10 Amp Live Part Socket
15 Amp Earthing Socket
5 X 15 Amp Universal Combine Socket
10 X 15 Amp Universal Combine Socket
Moulding Inserts
6 Amp Riveting TC Piller
16 Amp Riveting TC Piller
Riveting Piller
16 Amp Side Part
16 Amp Center Part
32 Amp Side Part
32 Amp Center Part
5 Amp Top Pin with Spring
Ceiling Rose


Polycab Cables2

Polycab Cables



Polycab Cables





We, at Bokadia Electric deal and distribute a wide range of Polycab Cables at market leading prices. Our range includes Armoured Cables, Unarmoured Cables, Flexible Cables, Coaxial Cables, Telephone Cables, Instrumentation Cables, etc. We procure these Cables from the leading manufacturers in this industry. Mentioned below is the detailed list of Polycab Cables.

Armoured Cables
  • Copper Armoured
  • Aluminium Armoured. HT Cables up to 33 KV


Flexible Cables
  • House Wires (FR Wires, FRLS Wires, ZHFR Wires)
  • Industrial Wires
  • Single Core Cables
  • Multi Core Cables
  • Welding Cables
  • Braided Cables
  • Winding Wires
  • Submersible Cables
  • Coaxial Cables
  • LAN Cables
  • Instrumentation Cables
  • Rubber Cables


Telephone Cables
  • Jelly Filled Armoured
  • Unarmoured Cables

Mysore Palace

he Palace of Mysore is a palace situated in the city of Mysore in southern India. It is the official residence of the Wodeyars – the erstwhile royal family of Mysore, and also houses two durbar halls.
Mysore has a number of historic palaces, and is commonly described as the City of Palaces. However, the term “Mysore Palace” specifically refers to one within the old fort. The palace was commissioned in 1897, and its construction was completed in 1912. It is now one of the most famous tourist attractions in Mysore. Although tourists are allowed to visit the palace, they are not allowed to take photographs inside the palace.
The architectural style of the palace is commonly described as Indo-Saracenic, and blends together Hindu, Muslim, Rajput, and Gothic styles of architecture. It is a three-storied stone structure, with marble domes and a 145 ft five-storied tower. The palace is surrounded by a large garden.
mysore palcase in karnataka india
Bronze leopard at the gate of mysore palace in karnataka india
mysore palace decorated for dasara festival
Beautiful garden in mysore palace
temple near mysore palace decorated with lights for dasara festival

mysore palace at night
beautifull decorated entrance of mysore palace

மஹா சிவராத்ரி பூஜை

[காலம் : பிரதி வருஷம், மாசி மாதம், கிருஷ்ணபக்ஷ சதுர்தசி (மஹா சிவராத்ரி) யன்று, மாலையில் ஸ்நானம், ஸந்த்யா வந்தனம் முதலியவைகளைச் செய்தபின், ராத்திரி வேளையில் சிவராத்ரி பூஜை செய்ய வேண்டும்.)
விக்நேச்வர பூஜை :
(மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு) கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்|
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே
ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்||
அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி
மஹா கணபதிம் ஆவாஹயாமி
மஹாகணாதிபதயே ஆஸநம் ஸமர்ப்பயாமி
” ” அர்க்யம் “
” ” பாத்யம் “
” ” ஆசமநீயம் “
” ” ஔபசாரிகஸ்நாநம் “
” ” ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் “
” ” வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் “
” ” யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந் “
” ” கந்தாந் தாரயாமி “
” ” கந்தஸ்யோபரி அக்ஷதாந் “
” ” அலங்கரணார்த்தம் அக்ஷதாந் “
” ” ஹரித்ரா குங்குமம் “
புஷ்பை : பூஜயாமி (புஷ்பம், அக்ஷதையால் மஞ்சள் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவும்.)
ஓம் ஸுமுகாய நம: ஓம் தூமகேதவே நம:
” ஏகதந்தாய நம: ” கணாத்யக்ஷாய நம:
” கபிலாய நம: ” பாலசந்த்ராய நம:
” கஜகர்ணகாய நம: ” கஜாநநாய நம:
” லம்போதராய நம: ” வக்ரதுண்டாய நம:
” விகடாய நம: ” ச்சூர்ப்ப கர்னாய நம:
” விக்நராஜாய நம: ” ஹேரம்பாய நம:
” கணாதிபாய நம: ” ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
தூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.
(வெற்றிலை, பாக்கு, பழம், வெல்லம் நிவேதனம் செய்யவும்.)
நிவேதந மந்த்ரங்கள் :
ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் | தேவஸ்வித : ப்ரஸுவ | ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி.
அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி ஸ்வாஹா, ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா. ப்ரஹ்மணிம ஆத்மாம்ருதத்வாய | மஹாகணாதிபதயே
குடகண்ட, கதளீபல நிவேதநம் ஸமர்ப்பயாமி.
மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தராணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)
அம்ருதாபிதாநமஸி – உத்தராபோச்சநம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)
தாம்பூலம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தாம்பூலத்தில் விடவும்) (கற்பூரம் ஏற்ற வேண்டும்.)
நீராஜநம் ஸமர்ப்பயாமி.
நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)
பிரார்த்தனை :
வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப |
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா|| (ப்ரதக்ஷிணமும் நமஸ்காரமும் செய்யவும்)
கணபதி ப்ரஸாதம் ச்சிரஸா க்ருஹ்ணாமி (கணபதி ப்ரஸாதத்தை சிரஸில் தரித்துக் கொள்ள வேண்டும்)
ப்ராணாயாமம் :
ஓம்பூ: – ஓம்புவ: – ஓம்ஸுவ: – ஓம்மஹ: -
ஓம்ஜந: – ஓம்தப: – ஓம் ஸத்யம் – ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம் – பர்க்கோ தேவஸ்ய தீமஹி – தியோ யோந:
ப்ரசோதயாத் – ஓமாப: – ஜ்யோதீரஸ: -
அம்ருதம் ப்ரஹ்ம – பூர்ப்புவஸ்ஸுவரோம்.
ஸங்கல்பம் :
அந்தந்த ப்ரதாந பூஜைக்குரிய ஸங்கல்பத்தை அங்கங்கே குறிப்பிட்டதுபோல் செய்யவும்.
விக்நேஸ்வர உத்யாபநம் :
உத்தரணி ஜலத்தால் கையைத் துடைத்துக்கொண்டு,
“விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டா பயாமி; ச்சோபநர்த்தே க்ஷேமாய புநராகமநாய ச”
என்று மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்த வேண்டும்.
ப்ரதாந பூஜை
பூஜா ஆரம்பம் :
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் |
ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||
ப்ராணாயாமம் :
ஓம்பூ: – ஓம்புவ: – ஓம்ஸுவ: – ஓம்மஹ: -
ஓம்ஜந: – ஓம்தப: – ஓம் ஸத்யம் – ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம் – பர்க்கோ தேவஸ்ய தீமஹி – தியோ யோந:
ப்ரசோதயாத் – ஓமாப: – ஜ்யோதீரஸ: -
அம்ருதம் ப்ரஹ்ம – பூர்ப்புவஸ்ஸுவரோம்.
ஸங்கல்பம் :
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வரப்ரீத்யர்த்தம் சுபே சோபநே முஹூர்த்தே, ஆத்யப்ரஹ்மண: த்விதீய ப்ரார்த்தே, ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே, அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே…நாமஸம்வத்ஸரே உத்தராயனே, சிசிர ருதௌ, கும்ப மாஸே, க்ருஷ்ண பஷே, சதுர்தஸ்யாம் சுபதிதௌ…வாஸர யுக்தாயாம்…நக்ஷத்ர யுக்தாயாம்…, சதுர்தச்யாம் சுபதிதௌ, சிவராத்ரி புண்யகாலே, மம ஜந்மாப்யாஸாத் ஜந்ம ப்ரப்ருதி ஏதத்க்ஷண பர்யந்தம், பல்யே வயஸி, கௌமாரே, யௌவநே, வார்த்தகே ச ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷுப்தி அவஸ்தாஸு, மத்யே ஸம்பாவிதாநாம், ஸர்வேஷாம் பாபாநாம், ஸத்ய: அபநோதநார்த்தம், ஸ்ரீ ஸாம்ப ஸதாசிவ ப்ரஸாதேந, ஸகுடும்பஸ்ய மம, தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம், ஜ்ஞாந வைராக்ய மோஷ ப்ராப்த்யர்த்தம், சிவராத்ரி புண்ய காலே ஸாம்ப பரமேச்வர பூஜாம் கரிஷ்யே. ததங்கம் கலசபூஜாம் ச கரிஷ்யே ||
(அப உபஸ்ப்ருச்ய) ஜலத்தைத் தொட்டு, ‘விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டாபயாமி’ என்று சொல்லி, அக்ஷதை புஷ்பம் சேர்த்து மஞ்சள் பிள்ளையாரை வடக்கே நகர்த்தவும்.
கலச பூஜை :
(சந்தனம், குங்குமம், அக்ஷதை இவைகளால் தீர்த்த பாத்திரத்தை அலங்கரித்துக்
கையால் மூடிக்கொண்டு)
கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாச்ரித :
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா: ||
குக்ஷெள து ஸாகரா : ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா |
ருக்வேதோத யஜுர்வேத : ஸாமவேதோப்யதர்வண : ||
அங்கைச்ச ஸஹிதா : ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : |
ஆயாந்து தேவபூஜார்த்தம் துரிதக்ஷய காரகா : ||
கங்கே யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி :
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு ||
(என்று ஜபித்து, கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜாத் திரவ்வியங்களையும், தன்னையும்
ப்ரோக்ஷணம் செய்து கொள்க.)
கண்டா பூஜை :
ஆகமார்த்தந்து தேவாநாம் கமநார்த்தந்து ரக்ஷஸாம் |
கண்டாரவம் கரோம்யத்ய தேவதாஹ்வாந லாஞ்ச்சநம். என்று சொல்லி மணியை அடிக்கவும்.
தியானமும் ஆவாஹனமும் :
சந்த்ர கோடி ப்ரதீகாசம் த்ரிணேத்ரம் சந்த்ர பூஷணம் |
ஆபிங்கள ஜடாஜூடம் ரத்ந மௌளி விராஜிதம் ||
நீலக்ரீவம் உதாராங்கம் தாரஹாரோப சோபிதம் |
வரதாபய ஹஸ்தஞ்ச ஹரிணஞ்ச பரச்வதம் ||
ததாநம் நாக வலயம் கேயூராங்கத முத்ரகம் |
வ்யாக்ர சர்ம பரீதாநம் ரத்த ஸிம்ஹாஸந ஸ்திதம் ||
ஆகச்ச தேவதேவேச மர்த்யலோக ஹிதேச்சயா |
பூஜயாமி விதாநேந ப்ரஸந்ந : ஸுமுகோ பவ ||
உமா மஹேச்வரம் த்யாயாமி, ஆவாஹயாமி
ப்ராண ப்ரதிஷ்டை :
(அந்தந்த பூஜைக்குரிய தேவதையை விக்ரஹ மூர்த்தியிலோ, கலசத்திலோ, படம் முதலியவைகளிலோ கீழ்கண்ட வகையில் ப்ராண ப்ரதிஷ்டை செய்ய வேண்டும். தேவதா ப்ரதிமை இருந்தால் பஞ்ச கவ்யத்தால் அந்த ப்ரதிமையைச் சுத்தி செய்து ப்ராணப் ப்ரதிஷ்டை செய்ய வேண்டும். படமாக இருந்தால் ப்ராண ப்ரதிஷ்டை மட்டும் செய்ய வேண்டும்.)
ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய, ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வரா: ரிஷய:, ருக் யஜூஸ் சாம அதர்வாணி ச்சந்தாம்ஸி || ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார ஹாரிணீ ப்ராண சக்தி: பரா தேவதா |
ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம். ப்ராண ப்ரதிஷ்டாபநே விநியோக:
ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:, ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:, க்ரோம் மத்யமாப்யாம் நம:
ஆம் அநாமிகாப்யாம் நம:, ஹ்ரீம் கநிஷ்ட்டிகாப்யாம் நம:, க்ரோம் கரதல கரப்ருஷ்ட்டாப்யாம் நம:
ஆம் ஹ்ருதயாய நம:, ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹா, க்ரோம் சிகாயை வஷட், ஆம் கவசாய ஹும், ஹ்ரீம் நேத்ர த்ரயாய வௌஷட், க்ரோம் அஸ்த்ராய பட், பூர்ப்புவஸ் ஸுவரோமிதி திக்பந்த: ||
த்யாநம் :
ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ தருண
ஸரோஜா திரூடா க்ராப்ஜை:
பாசம் கோதண்ட மிக்ஷூத்பவ மளிகுண-
மப்யங்குசம் பஞ்சபாணாந் |
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிணயந லஸிதா
பீந வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது ஸுககரீ
ப்ராணசக்தி: பரா ந: ||
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் | க்ரோம் ஹ்ரீம் ஆம் | அம் யம் ரம் லம் வம் சம் ஷம் ஸம் ஹம் ளம் க்ஷம் அஹ : ஹம்ஸ: ஸோஹம், ஸோஹம் ஹம்ஸ: |
அஸ்யாம் மூர்த்தௌ ஜீவஸ்திஷ்ட்டது. அஸ்யாம் மூத்தௌ ஸர்வேந்த்ரியாணி வாங் மநஸ் தவக் சக்ஷுச் ச்ரோத்ர ஜிஹ்வா க்ராண வாக் பாணி பாத பாயூபஸ்த்தாநி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்ட்டந்து ஸ்வாஹா |
(புஷ்பம், அஷ்தை இவைகளைத் தீர்த்தத்துடன் பிம்பத்தின் மீது விடவும்).
அஸுநீதே புநரஸ்மாஸு சக்ஷு: புந: ப்ராணமிஹ நோ தேஹி போகம் | ஜ்யோக் பச்யேம ஸூர்ய மூச்சரந்த மநுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி ||
*ஆவாஹிதோ பவ | ஸ்த்தாபிதோ பவ | ஸந்நிஹிதோ பவ | ஸந்நிருத்தோ பவ | அவகுண்டிதோ பவ | ஸுப்ரீதோ பவ | ஸுப்ரஸந்நோ பவ | ஸுமுகோ பவ | வரதோ பவ | ப்ரஸீத ப்ரஸீத ||
(* ஸ்த்ரீ தேவதையானால் ‘ஆவாஹிதா பவ, ஸ்த்தாபிதா பவ.’ என்ற வகையில் இங்குள்ள சொற்களை மாற்றிக் கொள்ளவும்.
**ஸ்வாமிந் ஸர்வஜகந்நாத யாவத் பூஜாவளாநகம் | தாவத் த்வம் ப்ரீதி பாவேந பிம்பேஸ்மிந் ஸந்நிதிம் குரு || என்று பிரார்த்தித்து, வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றை நிவேதநம் செய்யவும்.
(** ஸ்த்ரீ தேவதையானால் ‘தேவி ஸர்வ ஜகந்மாத:’ என்று மாற்றிக்கொள்ளவும்.)
குறிப்பு : இவ்வாறு பூர்வாங்க பூஜைகளை முடித்தபின் பிரதான பூஜையைத் தொடங்கவேண்டும். பாதாஸநம் குரு ப்ராஜ்ஞ நிர்மலம் ஸ்வர்ண நிர்மிதம் |
பூஷிதம் விவிதை: ரத்நை: குரு த்வம் பாதுகாஸநம் ||
உமாமஹேச்வராய நம:, ரத்நாஸநம் ஸமர்ப்பயாமி.
கங்காதி ஸர்வ தீர்த்தேப்ய: மயா ப்ரார்த்தநயாஹ்ருதம் |
தோயம் ஏதத் ஸுகஸ்பர்சம் பாத்யார்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
உமாமஹேச்வராய நம:, பாத்யம் ஸமர்ப்பயாமி.
கந்தோதகேந புஷ்பேண சந்தநேந ஸுகந்திநா |
அர்க்யம் க்ருஹாண தேவேச பக்திம் மே ஹ்யசலாம் குரு ||
உமாமஹேச்வராய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி.
கர்பூரோசீர ஸுரபி சீதளம் விமலம் ஜலம் |
கங்காயாஸ்து ஸ்மாநீதம் க்ருஹாணாசமநீயகம் ||
உமாமஹேச்வராய நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
ரஸோஸி ரஸ்ய வர்கேஷு ஸுக ரூபோஸி சங்கர |
மது பர்க்கம் ஜகந்நாத தாஸ்யே துப்யம் மஹேச்வர ||
உமாமஹேச்வராய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.
பயோததி க்ருதஞ்சைவ மதுசர்க்கரயா ஸமம் |
பஞ்சாம்ருதேந ஸ்நபநம் காரயே த்வாம் ஜகத்பதே ||
உமாமஹேச்வராய நம: பஞ்சாம்ருத ஸ்நாநம் ஸமர்ப்பயாமி.
மந்தாகிந்யா: ஸமாநீதம் ஹேமாம்போருஹ வாஸிதம் |
ஸ்நாநாய தே மயா பக்த்யா நீரம் ஸ்வீக்ரியதாம் விபோ ||
உமாமஹேச்வராய நம: சுத்தோதகஸ்நாநம் ஸமர்ப்பயாமி.
ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
வஸ்த்ரம் ஸூக்ஷ்மம் துகூலே ச தேவாநாமபி துர்லபம் |
க்ருஹாண த்வம் உமாகாந்த ப்ரஸந்நோ பவ ஸர்வதா ||
உமாமஹேச்வராய நம:, வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி.
யக்ஞோபவீதம் ஸஹஜம் ப்ரஹ்மணா நிர்மிதம் புரா |
ஆயுஷ்யம் பவ வர்ச்சஸ்யம் உபவீதம் க்ருஹாண போ: ||
உமாமஹேச்வராய நம: யஜ்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி.
ஸ்ரீகண்டம் சந்தநம் திவ்யம் கந்தாட்யம் ஸுமனோஹரம் |
விலேபநம் ஸுரச்ரேஷ்ட மத்தத்தம் ப்ரதி க்ருஹ்யதாம் ||
உமாமஹேச்வராய நம: கந்தம் ஸமர்ப்பயாமி.
அக்ஷதாந் சந்த்ர வர்ணாபாந் சாலேயாந் ஸதிலாந் சுபாந் |
அலங்காரார்த்தமாநீதாந் தாரயஸ்வ மஹாப்ரபோ ||
உமாமஹேச்வராய நம: அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.
மால்யாதீநி ஸுகந்தீநி மாலத்யாதீநி வை ப்ரபோ |
மயா ஹ்ருதாநி புஷ்பாணி பூஜார்த்தம் தவ சங்கர ||
உமாமஹேச்வராய நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி.
|| அங்க பூஜா ||
சிவாய நம : பாதௌ பூஜயாமி
சர்வாய நம : குல்பௌ “
ருத்ராய நம : ஜாநுநீ “
ஈசாநாய நம ஜங்கே “
பரமாத்மநே நம : ஊரு “
ஹராய நம : ஜகநம் “
ஈச்வராய நம : குஷ்யம் “
ஸ்வர்ண ரேதஸே நம : கடிம் “
மஹேச்வராய நம : நாபிம் “
பரமேச்வராய நம : உதரம் “
ஸ்படிகாபரணாய நம : வக்ஷஸ்தலம் “
த்ரிபுரஹந்த்ரே நம : பாஹூன் “
ஸர்வாஸ்த்ர தாரிணே நம : ஹஸ்தான் “
நீலகண்டாய நம : கண்டம் “
வாசஸ்பதயே நம : முகம் “
த்ரியம்பகாய நம : நேத்ராணி “
பால சந்த்ராய நம : லலாடம் “
கங்காதராய நம : ஜடாமண்டலம் “
ஸதாசிவாய நம : சிர : “
ஸர்வேச்வராய நம : ஸர்வாண்யங்காநி “
(பிறகு அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யவும்)
|| சிவாஷ்டோத்தர சத நாமாவளி : ||
ஓம் சிவாய நம : ஓம் வீரபத்ராய நம :
” மஹேச்வராய நம : ” கணநாதாய நம :
” சம்மவே நம : ” ப்ரஜாபதயே நம :
” பிநாகிநே நம : ” ஹிரண்ய ரேதஸே நம :
” சசிசேகராய நம : ” துர்த்தர்ஷாய நம :
” வாமதேவாய நம : ” கிரீசாய நம : (60)
” விரூபாக்ஷாய நம : ” கிரிசாய நம :
” கபர்திநே நம : ” அநகாய நம :
” நீலலோஹிதாய நம : ” புஜங்க பூஷணாய நம :
” சங்கராய நம : (10) ” பர்க்காய நம :
” சூல பாணயே நம : ” கிரிதந்வநே நம :
” கட்வாங்கிநே நம : ” கிரிப்ரியாய நம :
” விஷ்ணுவல்லபாய நம : ” க்ரித்திவாஸஸே நம :
” சிபிவிஷ்டாய நம : ” புராராதயே நம :
” அம்பிகா நாதாய நம : ” பகவதே நம :
” ஸ்ரீ கண்டாய நம : ” ப்ரமதாதிபாய நம : (70)
” பக்தவத்ஸலாய நம : ” ம்ருத்யுஞ்ஜயாய நம :
” பவாய நம : ” ஸூக்ஷம தநவே நம :
” சர்வாய நம : ” ஜகத் வ்யாபிநே நம :
” த்ரிலோகேசாய நம : (20) ” ஜகத் குரவே நம :
” சிதி கண்டாய நம : ” வ்யோம கேசாய நம :
” சிவா ப்ரியாய நம : ” மஹாஸேந ஜநகாய நம :
” உக்ராய நம : ” சாரு விக்ரமாய நம :
” கபர்திநே நம : ” ருத்ராய நம :
” காமாரயே நம : ” பூத பதயே நம :
” அந்தகாஸுர ஸூதநாய நம : ” ஸ்தாணவே நம : (80)
” கங்காதராய நம : ” அஹிர்புத்ந்யாய நம :
” லலாடாக்ஷாய நம : ” திகம்பராய நம :
” கால காலாய நம : ” அஷ்டமூர்த்தயே நம :
” க்ருபா நிதயே நம : (30) ” அநேகாத்மநே நம :
” பீமாய நம : ” ஸாத்விகாய நம :
” பரசு ஹஸ்தாய நம : ” சுத்த விக்ரஹாய நம :
” ம்ருகபாணயே நம : ” சாச்வதாய நம :
” ஜடாதராய நம : ” கண்ட பரசவே நம :
” கைலாஸ வாஸிநே நம : ” அஜாய நம :
” கவசிநே நம : ” பாப விமோசநாய நம : (90)
” கடோராய நம : ” ம்ருடாய நம :
” த்ரிபுராந்தகாய நம : ” பசுபதயே நம :
” வ்ருஷாங்காய நம : ” தேவாய நம :
” வ்ருஷபாரூடாய நம : (40) ” மஹா தேவாய நம :
” பஸ்மோதூளித விக்ரஹாய நம : ” அவ்யயாய நம :
” சாம ப்ரியாய நம : ” ஹரயே நம :
” ஸ்வரமயாய நம : ” பகநேத்ரபிதே நம :
” த்ரயீமூர்த்தயே நம : ” அவ்யக்தாய நம :
” அநீச்வராய நம : ” தக்ஷாத்வரஹராய நம :
” ஸர்வஜ்ஞாய நம : ” ஹராய நம : (100)
” பரமாத்மநே நம : ” பூஷதந்தபிதே நம :
” சோம ஸூர்யாக்நி லோசநாய நம : ” அவ்யக்ராய நம :
” ஹவிஷே நம : ” ஸஹஸ்ராக்ஷாய நம :
” யஜ்ஞ மயாய நம : (50) ” ஸஹஸ்ரபதே நம :
” ஸோமாய நம : ” அபவர்க்க ப்ரதாய நம :
” பஞ்சவக்த்ராய நம : ” அநந்தாய நம :
” ஸதாசிவாய நம : ” தாரகாய நம :
” விச்வேச்வராய நம : ” பரமேச்வராய நம : (108)
ஸாம்ப பரமேச்வராய நம :, நாநாவித பரிமளாத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி ||
உத்தராங்க பூஜை
வநஸ்பதிரஸோத்பூத : கந்தாட்யச்ச மநோஹர : |
ஆக்ரேய : ஸர்வதேவாநாம் தூபோயம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
உமாமஹேச்வராய நம:, தூபம் ஆக்ராபயாமி.
ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நிநா யோஜிதம் மயா |
தீபம் க்ருஹாண தேவேச த்ரைலோக்ய திமிராபஹம் ||
உமாமஹேச்வராய நம:, தீபம் தர்சயாமி.
நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவ பக்திம் மே ஹ்யசலாம் குரு |
சிவேப்ஸிதம் வரம் தேஹி பரத்ர ச ப்ராம் கதிம் ||
உமாமஹேச்வராய நம:, மஹாநைவேத்யம் ஸமர்ப்பயாமி.
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம், பர்க்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓம் தேவ ஸவித : ப்ரஸுவ, ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி, அம்ருதோபஸ்தரண மஸி. ஓம் ப்ராணாயஸ்வாஹா, ஓம் அபாநாயஸ்வாஹா, ஓம் வ்யாநாயஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாயஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணேஸ்வாஹா, ப்ரஹ்மணி ம ஆத்மா அம்ருதத்வாய. அம்ருதாபிதாநமஸி.
நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர் யுதம் |
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
உமாமஹேச்வராய நம:, கர்ப்பூர தாம்பூலம் ஸமர்ப்பயாமி.
சக்ஷுர்தம் ஸர்வலோகாநாம் திமிரஸ்ய நிவாரணம் |
ஆர்திக்யம் கல்பிதம் பக்த்யா க்ருஹாண பரமேச்வர ||
உமாமஹேச்வராய நம:, கர்ப்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி.
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
யாநி காநிச பாபாநி ஜந்மாந்தர க்ருதானி ச |
தாநி தாநி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே ||
உமாமஹேச்வராய நம:, பரதக்ஷிணம் ஸம்ர்ப்பயாமி.
புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண கருணாநிதே |
நீலகண்ட விரூபாக்ஷ வாமார்த்த கிரிஜ ப்ரபோ ||
உமாமஹேச்வராய நம: புஷ்பாஞ்ஜலிம் ஸமர்ப்பயாமி.
மந்த்ரபுஷ்பம் ஸுவர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி.
மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஸுரேச்வர |
யத்பூஜிதம் மயா தேவ பரிபூரணம் ததஸ்து தே ||
வந்தே சம்புமுமாபதிம் ஸுரகுரும் வந்தே ஜகத்காரணம்
வந்தே பந்நகபூஷணம் ம்ருகதரம் வந்தே பசூநாம் பதிம் |
வந்தே ஸூர்ய சசாங்க வஹ்நி நயநம் வந்தே முகுந்த ப்ரியம்
வந்தே பக்த ஜநாச்ரயஞ்ச வரதம் வந்தே சிவம் சங்கரம் ||
நமச்சிவாய ஸாம்பாய ஸகணாய ஸஸூநவே |
ஸநந்திநே ஸகங்காய ஸவ்ருஷாய நமோ நம: ||
நமச்சிவாப்யாம் நவ யௌவநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர் தராப்யாம் |
நகேந்த்ர கந்யா வ்ருஷ கேதநாப்யாம்
நமோ நமச்சங்கர பார்வதீப்யாம் ||
அர்க்யம் :
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் |
ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வவிக்நோப சாந்தயே ||
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா பரமேச்வர ப்ரீத்யர்த்தம், மயா
சரித சிவராத்ரி வ்ரதபூஜாந்தே க்ஷீரார்க்ய ப்ரதாநம், உபாயநதாநஞ்ச் கரிஷ்யே ||
நமோ விச்வஸ்வரூபாய விச்வஸ்ருஷ்ட்யாதி காரக |
கங்காதர நமஸ்துப்யம் க்ருஹாணார்க்யம் மயார்ப்பிதம் ||
உமாமஹேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் |
நமச்சிவாய சாந்தாய ஸர்வபாபஹராயச |
சிவராத்ரௌ மயா தத்தம் க்ருஹாணார்க்யம் ப்ரஸீத மே ||
உமாமஹேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் |
துக்க தாரித்ர்ய பாபைச்ச தக்தோஹம் பார்வதீபதே |
மாம் த்வம் பாஹி மஹாபாஹோ க்ருஹாணார்க்யம் நமோஸ்து தே ||
உமாமஹேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் |
சிவாய சிவரூபாய பக்தாநாம் சிவதாயக |
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ப்ரஸந்தோ பவ ஸர்வதா ||
உமாமஹேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் |
அம்பிகாயை நமஸ்துப்யம் நமஸ்தே தேவி பார்வதி |
அம்பிகே வரதே தேவி க்ருஹ்ணீதார்க்யம் ப்ரஸீத மே ||
பார்வத்யை நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் |
ஸுப்ரஹ்மண்ய மஹாபாக கார்த்திகேய ஸுரேச்வர |
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ வரதோ பவ ||
ஸுப்ரஹ்மண்யாய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் |
சண்டிகேசாய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் |
அநேந அர்க்ய ப்ரதாநேந பகவாந் ஸர்வதேவதாத்மக:
ஸபரிவார ஸாம்ப பரமேச்வர: ப்ரீயதாம் ||
உபாயந தாநம் :
ஸாம்பசிவ ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸநம், அமீதே கந்தா: (தாம்பூலம் தக்ஷிணை, வாயநம் ஆகியவற்றைக் கீழ்க்கண்ட மந்த்ரம் சொல்லித் தர வேண்டும்.) ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ: |
அநந்தபுண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயச்ச மே ||
இதமுபாயநம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸாம்பசிவ ப்ரீதிம்
காமயமாந: துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம|| (நமஸ்காரம் செய்யவும்)
|| ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து ||

Padmanabhapuram Palace

Padmanabhapuram Palace complex is located in at Padmanabhapuram Fort, close to the town of Thuckalay in Kanyakumari, Tamilnadu. It is about 20 km from Nagercoil. The palace complex is inside an old granite fortress around four kilometers long. The palace is located at the foot of the Veli Hills, which form a part of the Western Ghats. The river Valli flows nearby. The palace is administered by the Government of Kerala archeology department.
The palace was constructed around 1601 A.D by Iravipillai Iravivarma Kulasekhara Perumal who ruled Travancore between 1592 A.D. and 1609 A.D. In the late 18th century, the capital of Travancore was shifted from here to Thiruvananthapuram, and the place lost its former glory. However, the palace complex continue to be the best examples of traditional Kerala architecture, and some portions of the sprawling complex are also the hall mark of traditional Kerala style building art.
padmanabhapuram palace built on ancient kerala style
huge dining hall in padmanabhapuram palace
kings court in padmanabhapuram palace
Padmanabhapuram palace in india
The traditional home of the Travancore royal family of Kerala.
huge pillar made of wood in padmanabhapuram palace
Kannimoola-TheSouthwest corner of a traditional building or temple is very special. It is known as Kannimoola and this is the place, which provides protection to this palace.
padmanabhapuram palace
The palace is known for it antiques, including the armoury of the royal family.
artistic wood work in padmanabhapuram palace
The woodwork in this palace is intricate. This Palace is maintained by the Govt.of Kerala Tourism Board.

bed room in padmanabhapuram palace
King's bed made of 18 ayurvedic herbs and wood
The Padamnabhapuram Palace complex has several other interesting features:
* The Palace though surrounded entirely by the State of Tamil Nadu is still part of Kerala and the land and Palace belongs to the Government of Kerala.
* The clock tower in the palace complex has a 300 year old clock, which still keeps time.
* A big hall now bare, which can accommodate around 1000 guests, and where ceremonial feasts were held, on auspicious occasions.
* A secret passage, now blocked, through which the king, his immediate family members, and their entourage could escape to another palace, located several kilometers away in the event of any emergency. Name of this palace is Charottu kottaram.
* A flight of steps leads to a bathing pond, which has lost its freshness due to neglect and years of disuse.
* The Palace complex also has a section of curios and several interesting objects:
o An entire room filled with old Chinese jars, all gifts by Chinese merchants.
o A variety of weapons (which were actually used in warfare), including swords and daggers.
o Brass lamps, wood and stone sculpture, a variety of furniture and large mirrors made of polished metal.
o A gallery of paintings depicting incidents from the history of Travancore.
o A wooden cot made of up to 64 wooden pieces of a variety of medicinal tree trunks
o Polished stone cot, meant for cool effect
o Toilet and well

Thanjavur Palace

The name Thanjavur is derived from “Tanjan”, a legendary asura in Hindu mythology. Thanjavur is one of the oldest cities in India and has a long and varied history dating back to Sangam period. The city rose into prominence during the rule of the Later Cholas when it served as the capital of the Chola empire. After the fall of the Cholas, the city was ruled by the Pandyas, Vijayanagar Empire, the Madurai Nayaks, the Thanjavur Nayaks, the Thanjavur Marathas and the British. It has been a part of independent India since 1947.
Thanjavur is an important center of South Indian art and architecture. Most of the Great Living Chola Temples, an UNESCO World Heritage Monument are located in an around Thanjavur. The foremost among the Great Living Chola temples, the Brihadeeswara Temple, is located in the center of the town. Thanjavur is also the home of the Tanjore painting, a painting style unique to the region. The town is an important agricultural center located at the heart of the region, known as the “rice bowl of Tamil Nadu”. South Zone Culture Centre in Thanjavur is one of many regional cultural centres established by Indian Government to preserve and promote traditional cultural heritage of India.
he Thanjavur area has a rich historical heritage and is a prism of ancient as well as the modern south Indian civilizations. The city was once the stronghold of the historic Cholas and at one time was also the capital of the Cholas, Mutharayars and Marathas when they were at the peak of their power. Since then, Thanjavur has been one of the chief political, cultural and religious centres of South India.
Thanjavur contains over 90 temples, as it was favored by the Chola rulers between the 1st – 12th centuries, the Nayakas in the 16th century, and the Marathas in the 17th and 18th centuries.
thanjavore royal palace
thanjavore palace built by maratha rulers
sculpture of women in thanjavore palace
Ceiling of thanjore palace
artistic pillars of Tanjore Royal Palace
THANJORE PALACE in tamilnadu india
Tanjore Royal Palace (Thanjavur) and Museum in tamilnadu india
sculptures of bull & elephant at thanjavr royal palace

கந்தர் சஷ்டிக் கவசம்



கந்தர் சஷ்டிக் கவசம்

காப்பு
நேரிசை வெண்பா


துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

குறள் வெண்பா

அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்
நிலை மண்டில ஆசிரியப்பா




  


1) சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்

2) கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!

3) வாசவன் முருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!

4) சரவண பவனார் சடுதியில் வருக
ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விபச சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

5) வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க

6) விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்

7) சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்

8) நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

9) முப்பரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றூந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்

10) திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண





11) ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து

12) முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

13) உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க

14) பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

15) முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க

16) சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

17) வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

18) பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

19) முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

20) எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க





21) ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

22) பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

23) கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

23) கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும்

24) பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்

25) காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

26) அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

27) கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்

28) பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட

29) தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்


30) குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்



31) எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

32) உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்

33) காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா

34) கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

35) காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை

36) நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமுந்
மெத்தமெத் தாக வேலா யுதனார்

37) சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்

38) வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

39) பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

40) பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்




41) சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்

42) திசைமன்ன ரண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்

43) கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

44) சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

45) குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேன பதியே போற்றி!

46) குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!

47) உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!


Saturday, October 9, 2010

கோடிக்கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் உள்ளூர் விஞ்ஞானிகளும் தான் இந்த நாட்டை இதுவரை வளர்த்தெடுத்தார்கள். காலம் காலமாக அவர்கள் அரும்பாடு பட்டு எட்டிய வளர்ச்சியை கடந்த பதினைந்து ஆண்டுகளில் இவர்கள் புதிய பொருளாதாரக் கொள்கையின் பேரால் நாசமாக்கி விட்டார்கள். புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த பதினைந்து ஆண்டுகளில் நாடு முன்னேறியிருக்கிறது. அடையாறில் ஐ.டி.காரிடர் சாலை என்றால் சென்னையைச் சுற்றி வளைத்திருக்கிறார்கள் ஏக போக முதலாளிகள். போர்ட், ஹ¨ண்டாய்,பி.எம்.டபிள்யூ, செயிண்ட் கோபெய்ன் என கார் தொழிற்சாலைகளும் கண்ணாடி தொழிற்சாலைகளுமாய் ஒட்டு மொத்த இந்தியாவும் ‘முன்னேறுவது’ போல தமிழ்நாடும் ‘முன்னேறுகிறது’. ஆனால் இந்த மண்ணின் பூர்வ குடிகள் வாழ வழியில்லாது துரத்தப்படுகிறார்கள் தங்களின் சொந்த மண்ணில் இருந்து.

கடலோரங்களில் இருந்து காட்டுக்கும், கிராமங்களில் இருந்தும் நகரங்களுக்கும் துரத்தப்படுகிறார்கள். தங்களின் விவசாய நிலங்களை அடி மாட்டு விலைக்கு விற்று விட்டு வேலை தேடி நகரங்களுக்கு வருகிறார்கள் அவர்கள். ஆனால் நகரமோ இது உனக்கான இடமில்லை எனச் சொல்லி துரத்த, போக்கிடம் இல்லாமல் முடிவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் விவசாயிகள். இதுதான் இன்றைய வளரும் இந்தியாவில் ஏழைகளின் நிலை. அவர்கள் யாரோ ஒருவர் அல்ல. அவர்கள் உழைத்துத்தான் நாம் நகரங்களில் அமர்ந்து உண்டு உறங்கினோம். இன்று அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போது அதை ஒரு செய்தியாக மட்டுமே கேட்டு நாம் கடந்து போகிறோம்.பன்னாட்டு முதலாளிகளால் வறுமையோடு சேர்த்து விவசாயிகளுக்கு பரிசளிக்கப்படும் இந்த தற்கொலைக் கயிறுகள் நாளை நம் அனைவருக்கும் வழங்கப்படும் என்பதை சூழல்கள் உணர்த்துகின்றன.

நாடு முழுக்க லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பிறகும் இந்த பொருளாதாரக் கொள்கை தோல்வி எனத் தெரிந்த பிறகும் மன்மோகன் சிங்குகளும் ப.சிதம்பரங்களும் அத்வானிகளும் இந்தக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்றால் இவர்கள் வேறு ஒன்றை எதிர்பார்க்கிறார்கள் என்று அர்த்தம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பார்ப்பன இந்து மதவெறிப் பாசிசம் இந்தியாவைச் சூழ்ந்தபோது நாம் எதிர்க்க வேண்டிய முதல் விஷயம் இந்து மதவெறிதான் என்று நினைத்திருந்தோம்.ஆனால் இன்று வாழவே முடியாத பல்வேறு வடிவங்களில் நாட்டை உலகமயக் கொள்கை சூறையாடும் பொழுது எதை எதிர்ப்பதற்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்? என்ற விவாதம் இன்று முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் சூழலும் கவனமும் வேறு திசையில் திரும்புகிறது என்பதை அவதானிக்கும் பாசிஸ்டுகளோ இந்த நேரத்தைப் பயன்படுத்துகிறார்கள். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மத மக்களையும் பொதுவாக நடத்தும் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப் படுத்துவோம் என அறைகூவுகிறார்கள். இரண்டு எதிரிகள் இரண்டு கயிறோடு வருகிறார்கள் இருவரையுமே எதிர்க்க வேண்டியதுதான் நமது கடமை.

இம்மாதிரியான சூழலில்தான் மொத்த சராசரி தமிழனின் வாழ்க்கையும் பாழாக்கப்படுகிறது. அதே வழியில் லட்சக்கணக்கான சிறுவியாபாரிகளும் அழிவின் விளிம்பில் சிக்கியிருக்கிறார்கள். சென்னையில் மட்டும் ரிலையன்ஸ் 60க்கும் மேற்பட்ட கடைகளை திறந்திருக்கும் சூழலில் சில்லறை வணிகம் மிக வேகமாக அழிந்து வருகிறது. தலையில் கீரைக் கட்டை சுமந்து வந்து தினந்தோறும் சில்லறைக் காசுகளுக்கு விற்பனை செய்து வந்த ஆயாவை நாம் நமது தெருவிலிருந்து துரத்தி விட்டு ரிலையன்ஸ் கடைகளை தேடிப்போகும் சூழல் நேர்ந்திருக்கிறது. அந்தவகையில் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் சில்லறை வணிகத்தில் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளை அனுமதிப்பதை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார். சமூக விழிப்புணர்வு இதழுக்காக அவரைச் சந்தித்தோம். பல மணி நேரம் நீண்ட நேர்காணலில் இருந்து சில பகுதிகள் வாசகர்களுக்கு....

உலகம் முழுக்க பல நாடுகளும் எதிர் கொள்ளும் ஒரு பிரச்சனை பண வீக்கம். உணவுப் பற்றாக்குறையும் தலை விரித்தாடுகிறது. இந்தியர்களும் சைனாக்காரர்களும் அதிமாக அரிசி சாப்பிடுவதால்தான் எங்களுக்க்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்றிருக்கிறார் புஷ். இம்மாதிரி ஏற்படும் பண வீக்கம் சிறு வியாபாரிகளை பாதிக்குமா?
உலகம் முழுக்க பணவீக்கம் உள்ளூரிலும் பண வீக்கம் என்றால் அது உலகமயக் கொள்கையின் தோல்விதான். அமெரிக்காவில் பணவீக்கம். அதனால் இந்தியா தடுமாறுகிறது என்பதெல்லாம் ‘தென்னை மரத்தில் தேள் கொட்டி பனைமரத்தில் நெறிக்கட்டுகிறது’ என்பது மாதிரிதான். மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நமது நாட்டில் எல்லா வளமும் ஏராளமாக இருக்கிறது. தாராளமாக விவசாய நிலங்களும் இருக்கிறது. நாம் உணவுப் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருந்த காலமும் ஒன்றிருந்தது. இன்று எந்தப் பொருளாக இருந்தாலும் இறக்குமதி செய்யும் கேவலமான நிலைக்கு நாட்டைக் கொண்டு சென்றது புதிய பொருளாதாரக் கொள்கைதான்.

நமக்குத் தேவையான பொருட்களை நாமே உறபத்தி செய்வதும் தேவைக்கு அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்து வேண்டிய பொருட்களை இறக்குமதி செய்வதும் தான் ஒரு இறையாண்மை மிக்க நாட்டின் கொள்கையாக இருக்க முடியும். இதைச் செய்ய உலக வர்த்தக ஒப்பந்தமோ, உலகமயமோ அவசியமில்லை. அமெரிக்காவின் நலனைப் பேணும் நோக்கில்தான் இந்தியாவின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப பாசனப் பரப்பையும் விவசாயத்தையும் அதிகரிக்காமல் நாளுக்கு நாள் விவசாய நிலங்களை சுருக்கிக் கொண்டு வருகிறார்கள். மரபான நமது விவசாயத்தை நசுக்கி மரபணு மாற்ற விதைகளை பயிரிடச் சொல்வதன் மூலம் இவர்கள் சொந்த மக்களைப் பற்றி கவலைப்படாமல் அமெரிக்காவைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.

சொந்த மக்கள் பட்டினியால் சாகிறார்கள். விவசாயிகளின் தற்கொலை விகிதம் அதிகரிக்கிறது. இப்போது இவர்களது கொள்கை எல்லாம் எப்படியாவது அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு விட வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. பொதுவாக ஏற்றுமதி என்பது என்ன? எது நமது தேவைக்கு அதிகமாக இருக்கிறதோ அதை இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். எது நமக்கு தட்டுப்பாடாக இருக்கிறதோ அதை இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் எதெல்லாம் இங்கு இருக்கிறதோ அதை எல்லாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். தேவைக்கு எதெல்லாம் உள்நாட்டில் தட்டுப்படாக இருக்கிறதோ அதை எல்லாம் இங்கிருந்து ஏற்றுமதி செய்து கப்பல் கப்பலாக வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி முட்டாள்தனமான பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துகிற ஒரு அரசாகத்தான் மத்திய அரசு இன்றைக்கு இருக்கிறது.

உதாரணத்துக்கு சமையல் எண்ணெய்க்கு நமது நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சமையல் எண்ணெயில் தன்னிறைவோடு இருந்த காலம் உண்டு. எப்படி தன்னிறைவு இருந்தது? ஒரு கிராமத்தில் எண்ணெய் தயாரிக்கிற கல் செக்கு இருக்கும். அந்த செக்கில் தயாரிக்கப்படுகிற எண்ணெய் அந்தக் கிராமத்தின் தேவையையே பூர்த்தி செய்து விடும். கிராமங்களில் எண்ணெய் தயாரிக்கும் தொழில் மூலம்தான் நாம் தன்னிறைவு அடைந்திருந்தோம். ஆனால் வளர்ந்த நாடுகள் அந்த எண்ணெய்யை சுத்தமில்லாதது, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று சொல்லி அந்த கிராமத் தொழிலையே அழித்து விட்டார்கள். காரணம் அமெரிக்காவில் விளைகிற சோயா பீன்ஸ் எண்ணெய்யும், இந்தோனேசியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து பாமாயிலையும் இறக்குமதி செய்வதற்காக அதை பலியிட்டார்கள்.

முதலில் உள்ளூர் தயாரிப்புக்களை அசுத்தமானது, ஆரோக்கியமில்லாதது என ஒழித்துக் கட்டுவது. பின்னர் தட்டுப்பாடு என்று சொல்லி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள். நமது பாரம்பரிய உணவுப் பொருட்கள் நமது அன்றாட வாழ்வில் கலந்திருந்த வரை நோய்கள் நம்மை விட்டு விலகி இருந்தன. ஏனென்றால் ‘உணவே மருந்து மருந்தே உணவு’ இதுதான் நமது பாரம்பரிய உணவுக் கலாச்சாரம். உற்பத்திக் கலாச்சாரமும் அதுதான். ஆனால் அதைத்தான் இவர்கள் அசுத்தம் எனச் சொல்லி நமது பாரம்பரிய உற்பத்திகளை அழித்து அந்நிய நாட்டிலிருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்கிறார்கள். கூடவே இலவசமாக பல விதமான நோய்களையும் இறக்குமதி செய்கிறார்கள்.

ஆன்லைன் வர்த்தகம் பற்றிய விழிப்புணர்வு பொதுவாக மக்களிடம் ஏன் வியாபாரிகளிடம் கூட இல்லையே?ஆன்லைன் வர்த்தகம் என்றால் என்ன? இம்மாதிரி இணைய வழி நடக்கும் வர்த்தகத்தால் விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களும் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

ஆன்லைன் வர்த்தகம் என்பது ‘பியூச்சர் டிரேடிங்’ என்கிற வடிவத்தில் முன்பு இருந்தது. இதை எதற்காக கொண்டு வந்தார்கள் என்றால் விவசாயப் பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கவில்லை என்பதால் இதை கொண்டு வந்தார்கள். ஒரு பொருள் விளைகிறபோதே அதற்கான விலையை நிர்ணயம் செய்து விளைந்த பிறகு அந்தப் பொருளை வாங்கிக் கொள்வதுதான் பியூச்சர் டிரேடிங். அப்படி முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்கள் என்ன விலைக்கு பதிவு செய்தார்களோ அந்த விலைக்கு விளைபொருளைக் கொடுத்தாக வேண்டும். யார் பதிவு செய்தார்களோ அவர்களுக்கு அந்த பொருளின் லாபம் போய்ச் சேரும். ஏற்கனவே விவசாயிகள் எந்த மொத்த வியாபாரிகளுக்கு தங்களின் விளைபொருட்களை கொடுக்கிறார்களோ அவர்களிடம் தங்களின் விவாசாய தொழிலுக்கான முன்பணம் வாங்குவது விவாசியிகளின் வாடிக்கை.

முன்தொகை யாரிடம் வங்குகிறர்களோ அவர்களுக்குத்தான் விளைபொருட்களை விற்கவேண்டும் என்பது ஜென்டில்மேன் அக்ரிமெண்ட். இதெல்லாம் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் நடக்கிற வியாபாரம். அதன் அடிப்படையில்தான் பியூச்சர் டிரேடிங் என்ற ஒன்றை கொண்டு வந்தார்கள். ஆனால் நாளடைவில் இது ஒரு வர்த்தகச் சூதாட்டமாய் மாறி விட்டது. ஒரு விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் வாங்கப்படுகிற பொருள் பல மடங்கு கொள்ளை லாபத்துக்கு விற்கப்படுகிற அக்கிரமமான சூதாட்டம்தான் இந்த ஆன்லைன் டிரேடிங். விவசாயிகளுக்கு நன்மையாக இருக்கும் எனக் கொண்டு வரப்பட்டு விவசாயிகளின் வாழ்க்கையை வைத்து மிக மோசமான சூதாட்டமாக இது மாறிப்போனதால் சுதந்திரத்துக்குப் பிறகு மூன்று முறை இந்த பியூச்சர் டிரேடிங் என்று சொல்லக் கூடிய இந்த ஆன்லைன் வர்த்தகத்தை இந்திய அரசு தடை செய்தது.

2003ல் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் மீண்டும் ஆன்லைன் வர்த்தகம் வேறு வடிவில் கொண்டு வரப்பட்டது. அப்படி கொண்டு வரும்போது ஐந்து வகையான பொருட்களை மட்டும் இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் சேர்க்கலாம் என்று அரிசி, சர்க்கரை, கோதுமை, செம்பு, தங்கம் என ஐந்து வகைப் பொருட்களை கொண்டு வந்தார்கள். அப்படி கொண்டு வரப்பட்ட சில நாட்களிலேயே தங்கம் விலை ஏகத்துக்கும் உயர்ந்தது. மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 150 வகையான பொருட்களை ஆன்லைன் வர்த்தகத்தில் இணைத்து விட்டார்கள். எந்தெந்த பொருட்களெல்லாம் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் அத்தியாவசியப் பொருட்களோ அந்த பொருட்களெல்லாம் இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் இணைந்து விட்டது.

இந்த சூதாடிகளுக்கும் உழைப்புக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. செயற்கையான வணிகம் இங்கு நடக்கிறது. கோடிக்கணக்கான பணத்திற்கு பொருளை விற்கிறேன் அல்லது வாங்குகிறேன் என்று கூறி எந்தப் பொருளும் இல்லாமல், விற்பனையும் இல்லாமல் செயற்கையான சந்தையை இந்த சூதாடிகள் உருவாக்குகிறார்கள். அவர்கள் விற்கும் மதிப்பில் மிகக் குறைந்த சதவீதமே செலுத்தினால் போதும். சந்தையில் போலியான ஒரு பொருட்தட்டுப்பாடு ஏற்படுகிறது. தட்டுப்பாடு ஏற்படுவதால் விலைவாசிகள் மேலும் உயர்கிறது. இதுதான் ஆன்லைன் வர்த்தகம். இதற்கு மத்திய அரசும் துணை போகிறது. பணமே போடாமல் உழைக்காமல் ஓர் அறையில் அமர்ந்து கம்யூட்டரின் உதவியோடு கோடி கோடியாக சம்பாதிக்கும் இந்த பேராசைக்காரர்களைப் போல நமது நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் ஒரு பேராசை இருக்கிறது. அது அரசாங்கத்தின் கஜானாவை நிறைக்க வேண்டும் என்பதுதான்.

பணமே போடாமல் பாக்கெட்டை நிரப்ப நினைக்கும் இந்த சூதாட்டக்காரர்களுக்கும் என்ன ஆனாலும் கஜானா நிரம்ப வேண்டும் என்று நினைக்கிற நிதி அமைச்சருக்கும் என்ன வித்தியாசம்? அப்படி கஜானாவை நிரப்ப இவர்கள் கண்டுபிடித்த வழிதான் ‘ஆன்லைன் டிரேடிங்’. இப்போ ஒரு குண்டூசியை மாநிலத்துக்குள்ளேயே வியாபாரம் செய்தால் அதற்கான வரியை நாம் மாநில அரசுக்குக் கட்டினால் போதும். ஆனால் அதே குண்டூசியை ஒரு மாநிலத்தை விட்டு இன்னொரு மாநிலத்துக்கு கொண்டுபோனால் மத்திய அரசுக்கு வரி கட்ட வேண்டும். ஆனால் இந்த ஆன்லைன் வர்த்தகம் எங்கு நடந்தாலும் சரி மத்திய அரசுக்கு 12.2% வரி கட்ட வேண்டும்.

ஆன்லைன் வர்த்தகத்தில் எந்தப் பொருளையும் செயற்கையாக வாங்கினாலும் சரி விற்றாலும் சரி மத்திய அரசுக்கு வரி கொடுத்து விட வேண்டும். அரசு கஜானா நிரம்பிவிடும் என சிதம்பரம் நம்புவது இப்படித்தான். ஆனால் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் சூதாடிகள் அரசுக்கு ஒழுங்காக வரி கட்டுவதில்லை. வருடாந்திர வருமானத்தை கணக்கிட்டு ஒரு தொகையை வரியாகச் செலுத்தி விட்டு தப்பிவிடுகிறார்கள். ஆனால் அதுவே பெரிய வருவாயாக இருப்பதால் அரசும் இதை அனுமதிக்கிறது.

ஏற்றுமதி என்பது மிக மோசமான திருட்டாக மாறிப்போனது இல்லையா?

ஆமாம் மிக மோசமான திருட்டாக மாறிப்போயிருக்கிறது. நமது வளங்களை கூறு போட்டு கப்பல் கப்பலாக ஏற்றி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்போ சிமெண்ட் விலையைப் பாருங்கள். விலையை குறைக்க வேண்டும் என சிமெண்ட் முதலாளிகளை எல்லாம் அழைத்துப் பேசி என்ன பயன்? விலை குறையவில்லையே? இருக்கிற பத்து முதலாளிகளுக்கு பதில் பல நூறு முதலாளிகள் இருந்து சிமெண்ட் உற்பத்தி செய்திருந்தால் விலை குறைந்திருக்குமா இல்லையா? ஒரு தொழிற்சாலையில் எவ்வளவு சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறதோ அந்த உற்பத்தியில் இருந்து 10% சிமெண்டை ஏற்றுமதி செய்யலாம் என்கிறது அரசு விதி. ஆனால் சிமெண்ட் தயாரிக்கிற மூலப் பொருளை ஏற்றுமதி செய்கிறோம் என்று குஜராத் துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்கிறார்கள்.

சிமெண்டைத்தானே ஏற்றுமதி செய்யக் கூடாது. நாங்கள் சிமெண்ட் தயாரிக்கும் மூலப் பொருளான க்ளிங்கரை ஏற்றுமதி செய்கிறோம் என்று இங்கிருந்து அதை கப்பலில் ஏற்றி அனுப்புகிறார்கள். அது செல்லும் வழியிலேயே சிமெண்டாக மாற்றப்பட்டு வெளிநாடுகளில் இறங்கும்போது சிமெண்டாக மாறி இறக்கி வைக்கப்படுகிறது. அது போல இரும்புப் பொருட்கள் மற்றும் பீரோ தயாரிக்கிற இரும்பு சீட் இன்று ஒரு டன் 65,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆரம்பத்தில் 18,000 ரூபாயாக இருந்த இரும்பு இன்றைக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அது போல பிளாஸ்டிக் என அனைத்து பொருட்களின் விலையும் ஏறுவதற்கு காரணம் தனியார் தொழிலதிபர்கள் தான். அவர்களுக்குத் தேவையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து அரசு பொதுத்துறை நிறுவனங்களை ஊக்குவிக்காமல் தேச வளத்தை இவர்கள் நாசம் செய்கிறார்கள்.

சமீபத்தில் கோதுமை விவசாயிகள் குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கேட்டுப் போராடினார்கள். கோதுமைகளை மூடை மூடையாக சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியும் பிரயோஜனம் இல்லை. மத்திய அரசு வாங்க மறுத்து விட்டது. 650 ரூபாய்க்காவது வாங்குங்கள் என்றார்கள், அதற்கும் மசியவில்லை அரசு. சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ரிலையன்ஸ் கோதுமையை குவிண்டாலுக்கு 650 ரூபாய் கொடுத்து லட்சக்கணக்கான குவிண்டால் கோதுமைகளை வாங்கி தனது கிட்டங்கியில் வைத்துக் கொண்டது. இப்போது நாட்டில் கோதுமை தட்டுப்பாடு. கோதுமைத் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு ஆஸ்திரேலியாவில் இருந்து குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து இறக்குமதி செய்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கிய கோதுமையை அதிக லாபம் வைத்து விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து விட்டது.

இது விவசாயிகளின் நுகர்வோரின் வயிற்றில் அடிக்கும் செயலில்லையா? அதனால்தான் சொல்கிறோம் இந்த பணவீக்கமும் உணவுத் தட்டுப்பாடும் போலியானது. மக்களின் பொருளும் விவசாயிகளின் விளைபொருளும் சில இடங்களில் குவிந்து கிடக்கிறது.

சிறு வியாபாரிகள் எனப்படுவோரை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள்?

ஒரு டி.வி.எஸ் சேம்ப்பை வைத்து அதிகாலையில் கோயம்பேடு சந்தைக்குப்போய் காய்கறி வாங்கிக் கொண்டு போய் அதை விற்பனை செய்பவரில் தொடங்கி தலையில் கூடையை வைத்து வீடு வீடாகப் போய் கீரைகளையும் காய்கறிகளையும் விற்பனை செய்யும் ஆயாவும் சில நூறு ரூபாய்களுக்கு பொருள் வைத்து ஒரு பொது இடத்தில் வைத்து விற்று விட்டு மீண்டும் மாலையில் வந்தோ மறு நாள் வந்தோ விற்கும் தொழிலாளிகள் கூட சிறு வியாபாரிகள்தான். இவர்கள் வெறும் வியாபாரிகள் மட்டுமல்ல, சிறு தாயாரிப்பாளர்களும் கூட. ஒரு தயாரிப்பாளர், அப்புறம் விநியோகஸ்தர், மொத்த வியாபாரி, பொது மக்களுக்கு நேரடி விநியோகம் செய்பவர்கள் என இந்த வணிகம் ஒரு சங்கிலியைப் போல பலரது உழைப்பு தொடர்பானது. பலருக்கும் வாழ்வளிப்பது. பத்து லட்சம் வரை வியாபாரம் செய்பவர்கள் சிறு வியாபாரிகள்தான்.

வாட்வரி என்று சொல்லக் கூடிய வணிக வரிச் சட்டத்துக்குள் வராத அனைவருமே சிறு வியாபாரிகள்தான். வியாபாரிகளில் சின்ன வியாபாரிகள் இருபத்தைந்து லட்சம் பேர் இருப்பார்கள். தெரு வியாபாரிகள், உற்பத்தியோடு தொடர்புடையவர்கள், சைக்கிளில் போய் விற்பனை செய்பவர்கள் என அறுபத்தைந்து லட்சம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் பலவிதமான சந்தை வடிவங்கள் இருக்கிறது. இம்மாதிரி சந்தைகள் தான் சிறு வணிகத்தில் ஒரு போட்டியை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு நியாயமான விலையைக் கொடுத்து வருகிறது. இந்த சந்தைகளை ஒழித்து ஏகபோகமாய் சில்லறை வர்த்தகத்தை சில தனியார் முதலாளிகளிடம் ஒப்படைப்பதுதான் மத்திய அரசின் திட்டம்.

நகராட்சி சந்தைகள், உள்ளாட்சி சந்தைகள் என இம்மாதிரி சந்தைகளை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள் தொழில்கள் இருக்கின்றன. ரிலையன்ஸ் கடைகள் வந்த பிறகு இவர்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெரிய நிறுவனங்களோடு இவர்கள் போட்டி போட்டாலும் சில்லறை வணிகத்தில் ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த லட்சக்கணக்கான தொழிலாளிகளை வேகமாக அழித்து விடும் என்பதில் ஐய்யமில்லை. மிகப்பெரிய பணபலத்தோடு பல நூறு தொழிலாளர்களின் துணையோடு விஸ்தாரமான சேமிப்பு கிட்டங்கியோடு கடை நடத்தும் ரிலையன்சும் சாதாரண பெட்டிக் கடைக்காரரும் சந்தைப் போட்டியில் பொருள் விற்க வேண்டும் என்பதே எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

ரிலையன்ஸ் வெளிக்கடையில் என்ன விலையோ அதே விலைக்குத்தான் இப்போது பொருட்களை விற்கிறான். சில பொருட்களை அதிக விலைக்கும் விற்கிறான். காரணம் வியாபாரிகளிடம் இருந்து எதிர்ப்பு வரக்கூடாது என்பதால்தான். ‘‘நம்ம விக்கிற விலைக்குத்தானே அவனும் விற்கிறான்’’ என இந்த வியாபாரிகளும் ஏமாந்து போகிறார்கள். ஆனால் ரிலையன்ஸ் தனது வலையை எல்லா இடத்துக்கும் விரிவுபடுத்திய பிறகு தெருவுக்குத் தெரு ரிலையன்ஸ் அங்காடிகளை திறந்த பிறகு அதிரடியாக விலை குறைப்பான். பொருட்களை உற்பத்தி செய்கிற பெரிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு ரிலையன்ஸ் இதைச் செய்யும்போது சில்லறை வியாபாரிகள் மொத்தமாக பாதிக்கப்படுவார்கள்.

இப்போதே சிறு வியாபாரிகளின் 25% வியாபாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளைப் போலவே சிறுவியாபாரிகளும் வணிகத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். கடைகளை விற்று விட்டு கூலி வேலைக்குப் போகிறார்கள். தங்களின் கடைகள் நல்ல விலைக்குப் போகுமா என்றும் ரிலையன்ஸ்காரன் நல்ல விலைக்கு அவர்களின் கடைகளை வாங்கிக் கொள்வான் என்றால் அவனுக்கும் கொடுத்து விடத் தயாராக இருக்கும் அளவுக்கு அவர்களின் வியாபாரம் நலிவடைந்திருக்கிறது. அரசுக்கு இது பற்றி எல்லாம் கவலை இல்லை. சிறு வணிகர்கள் மூலம் ஐந்தாயிரம் கோடிக்கு வியாபாரம் நடக்கிறதென்றால் அதில் நான்காயிரம் கோடி வரி அரசுக்கு வராது. ஏனென்றால் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகள் தனித் தனியாகத்தான் இந்த வியாபாரத்தை மேற்கொள்கிறார்கள். ஆகவே இந்த லட்சக்கணக்கான வியாபாரிகளை ஒழித்து விட்டு ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற சில முதலாளிகளை மட்டும் ஏகபோகமாய் சிறுவணிகத்தில் புகுத்துவதன் மூலம் அரசு கஜனாவுக்கு வரி வரும் எனச் சொல்கிறது மத்திய அரசு.

சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற பன்னாட்டு முதலாளிகளை ஈடுபடுத்துவதன் மூலம் விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்றும் இந்த முதலாளிகளை நேரடியாக விவசாயிகளுடன் கோர்ப்பதன் மூலம் நாங்கள் இடைத்தரகர்களை ஒழித்து விடுகிறோம். அப்படி ஒழிப்பதன் மூலம் நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கும் என ப.சிதம்பரம் சொல்கிறாரே?

விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையில் இருக்கும் இடைத்தரகர் என்போர் அமெரிக்காவில் இருந்து குதித்து வந்தவர்கள் இல்லை. அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். விவசாயத்தோடும் உடல் உழைப்போடும் நெருங்கிய தொடர்புடைய சிறுவியாபாரிகள். அப்படிப்பட்ட சிறு வியாபாரிகளைத்தான் சிதம்பரம் இடைத்தரகர்கள் என்கிறார். இந்த இடைத்தரகர்களின் ஓட்டை வாங்கித்தான் இன்று இவர் மத்திய அமைச்சராக இருக்கிறார். ரிலையன்ஸ் அம்பானியோ, வால்மார்ட் முதலாளியோ வந்து சிதம்பரத்துக்கு ஒட்டுப் போடப்போவதில்லை. லட்சக்கணக்கான சிறுவியாபாரிகள் வேலைவாய்ப்பை இழந்து போனால் இவர் என்ன செய்ய முடியும்?

கவர்ச்சிகரமான பொய்களை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் இவர்கள் மக்களை முட்டாள்களாக்கப் பார்க்கிறார்கள். சரி நான் ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். இவர் சொல்கிற இடைத்தரகர்களை ஒழித்து விட்டால் ரிலையன்ஸ்சும் வால்மார்ட்டும் நுகர்வோருக்கு நியாயமான விலை கொடுத்து விடுவான் என்று இவர் உத்திரவாதமிட்டு சொல்ல முடியுமா? இது மிகப்பெரிய மோசடி. ரிலையன்ஸ், இது முதலில் சிறுவியாபாரிகளை அழிக்கும், பின்னர் அவர்களின் சந்தையை முற்றிலுமாக அழித்து விடும்.

விவசாயிகள் தங்களின் விளைபொருளை விற்பதற்கு ஒரு சந்தை இல்லாது போகும் சூழலில் அவர்கள் ரிலையன்ஸ் கம்பெனியிடமே தங்களின் விவசாயப் பொருட்களை விற்கும் சூழல் ஏற்படும். அப்போ விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளைபொருளுக்கு ரிலையன்ஸ் விலை நிர்ணயம் செய்வான். இது மோசமான மோசடி. அவன் அடிமாட்டு விலைக்கு வாங்குவான். அடி மாட்டு விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பான். இதே தந்திரம் தான் ஆன்லைன் வர்த்தகத்திலும் இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவது இந்த சிறுவணிகம்தான்.

உலக வர்த்தக ஒப்பந்தத்தால்தான் நாடு முன்னேறி இருக்கிறது என்பது மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். காளிமார்க் சோடா, பவண்டோ எல்லாம் என்ன ஆனது? கோக் பெப்ஸிசியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 27% பூச்சிக் கொல்லி மருந்து அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறதே, அதை ஏன் இன்னும் இந்த அரசு தடை செய்யாமல் வைத்திருக்கிறது. முன்னரெல்லாம் உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மவுசு இருந்தது. அவர்களும் தங்களின் வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்புடையவர்கள் என்பதால் நேர்மையாக நடந்து கொண்டார்கள். ஆனால் இன்று பற்பசை,சோப்பு, குளிர்பானங்கள், ஊட்டச்சத்து பானங்கள் என எல்லாவற்றிலும் பன்னாட்டு முதலாளிகள் மட்டுமே இருக்கிறார்கள். எடையைக் குறைத்து ஆனால் அதே விலைக்கு விற்கிற - நுகர்வோரை ஏமாற்றுகிற செயலை இன்றைக்கு செய்து கொண்டிருக்கிற பன்னாட்டு முதலாளிகளை தட்டிக் கேட்கும் யோக்கியதை நமது அரசுக்கு இல்லை.

நமது மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கும் அரசு நமக்கான திட்டம் போடும் நம்மை வழிநடத்தும் என்கிற நிலை மாறி நாட்டின் அனைத்து முடிவுகளும் திட்டங்களும் தனியார் முதலாளிகளை மையப்படுத்தி செயல்படுத்தப்படுவது ஆபத்தானது இல்லையா? தொழிற் கொள்கை என்பதே மக்களின் கலாச்சார கொள்கையாக மாற்றப்படுகிறதே?

இது ஒரு நாட்டின் ஆகச் சீரழிந்த போக்கின் வெளிப்பாடு. ஏகபோக தொழில் வணிக கட்டுப்பாட்டுச் சட்டம் என்ற ஒன்று இருந்தது. ஏகபோகமாக எந்த தொழிலும் யாரிடம் இருக்கக் கூடாது. அப்படி ஏகபோக உரிமையோடு சில முதலாளிகள் இருந்தால் அவர்கள் பொருட்களை தரமில்லாமலும் தயாரிப்பார்கள். அதிக விலைக்கும் விற்பார்கள். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கோக் பெப்ஸி. சிமெண்ட் போன்றவைகள்தான். அரசு நிறுவனங்களை அழித்து பல உள்ளூர் தயாரிப்புகளையும் அழித்து விட்டு இன்று ஏகபோக முதலாளிகளை இதில் அறிமுகப்படுத்தி விட்டார்கள் மிகப்பெரிய ‘பொருளாதாரமேதைகள்’.

சிமெண்ட் விலையை சிதம்பரத்தாலோ மாநில அரசாலோ குறைக்க முடியவில்லையே?அது போல கலப்படத் தடைச் சட்டம் முன்பு இருந்தது. அதையும் இல்லாது ஒழித்து விட்டார்கள். மாம்பழத்தை பழுக்க வைக்க கால்சியம் கார்பைட்டைப் பயன்படுத்தினால் குற்றம். குளிர்பானத்தில் பூச்சிக் கொல்லியை கலந்தால் குற்றம் இல்லையா?

இதோ சிலிண்டர் விலை பெட்ரோல் டீசல் விலை எல்லாம் எகிறி விட்டது. ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலையைக் குறைக்க வேண்டும் என உத்தரவிடுகிற ஒரு நாளில் விலைவாசி கூடுகிறதென்றால் வியாபாரிகள் எப்படி விலையைக் குறைக்க முடியும்? உணவுப் பண்டங்களின் விலையைக் குறைக்க வேண்டும் எனக் கோருகிற அரசாங்கம் மூலப் பொருட்களின் விலையைக் குறைக்க என்ன வழி கண்டிருக்கிறது? சும்மா ஹோட்டல்காரர்களை அழைத்து மிரட்டுகிற வழக்கத்தை எல்லாம் பன்னாட்டு முதலாளிகளிடம் இவர்களால் காட்ட முடியாது என்பதுதான் உண்மை.

ரிலையன்ஸ் கடைகளை தமிழகத்தில் சில கட்சிகள் எதிர்த்தன. சில கட்சிகள் எதிர்க்கவே இல்லை. நீங்கள்கூட சில்லறை வணிகத்தில் ஏக போகத்தை எதிர்க்காதவர்களை வைத்து மாநாடு கூட நடத்தினீர்கள். உலகமயமாக்கத்தை பல சமயங்களில் நேரடியாகவும், சில சமயங்களில் மறைமுகமாகவும் ஆதரிக்கும் கட்சிகளைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் பி.எச்.பாண்டியன், வைகோ போன்ற தலைவர்களை வைத்து பொதுக்கூட்டம் நடத்தினீர்கள். இது முரண்பாடாக இருக்கிறதே? நந்திகிராம் விஷயத்தில் விவசாயிகளின் மரணத்திற்கு காரணமான மார்க்சிஸ்ட் கட்சியும் இதில் கலந்து கொண்டதே?

நாங்கள் நடத்தியது விலைவாசி எதிர்ப்பு மாநாடு. அந்த நோக்கில் தான் கட்சித் தலைவர்கள் எல்லோரையும் பாகுபாடின்றி அழைத்திருந்தோம். மற்றபடி, உலகமயமாக்கலை யார் ஆதரித்தாலும் எதிர்த்துப் போராடுவோம். பெரும்பாலான தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் இனி இதை எல்லாம் எதிர்க்க முடியாது என்று. அரசியல் கட்சிகள் மட்டுமல்ல வியாபாரிகளே அப்படித்தான் நினைக்கிறார்கள். அப்படி இல்லை. இதை நாம் முறியடித்து மாற்றியாக வேண்டும். அதற்காகத்தான் வணிகர் சங்கம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.

ரிலையன்ஸ் கடைகளை உத்திரபிரதேசத்தில் மூட முடிந்ததே நம்மால் முடியாதா என்ன? அங்கும் இப்படித்தான் முதலில் நினைத்தார்கள், கடைசியில் வியாபாரம் சீரழிந்து விவசாயிகள் பட்டினியில் கிடந்து மொத்த விவசாயமும் பாழடைந்தபோது மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைவரும் ஒன்றிணைந்து ரிலையன்ஸ் கடைகளை அடித்து நொறுக்கியதன் விளைவு அந்தக் கடைகளை அங்கு மூட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்படி பல நாடுகளிலும் வால்மார்ட்டை மக்கள் துரத்தி அடித்திருக்கிறார்கள். அப்படியான ஒரு சூழல் இங்கும் வரும், அதற்கு நீண்ட நாள் காத்திருக்கத் தேவையில்லை. ஒற்றுமையும் அரசியல் விழிப்புணர்வும்தான் தேவை.

எங்கள் விலைவாசி எதிர்ப்பு மாநாட்டுக்கு எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். காங்கிரஸ், திமுக., வைத் தவிர அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன. பொதுவாக அனைத்து அரசியல் கட்சிகளுமே மக்களை ஏமாற்றுகின்றன. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகள் மேற்கு வங்கத்தில் ஒரு நிலைப்பாடும் இங்கு ஒரு நிலைப்பாடும் வைத்திருப்பதால் அவர்களுடனும் நாங்கள் உடன்படவில்லை. நந்திகிராம் விஷயத்தில் மார்க்சிஸ்டுகள் எடுத்த நிலைப்பாடு தவறானது என்பது எங்கள் கருத்து.

வணிகர் சங்கத்துக்கு நாடார் சங்கம் போல ஒரு தோற்றம் இருக்கிறதே?

சிறு வணிகர்களில் அதிகளவில் இந்த சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் அப்படி ஒரு தோற்றம் இருக்கலாமே தவிர உண்மையில் அப்படி இல்லை. எங்களின் மாநில அமைப்பில் அனைத்து சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் எல்லாப் பொறுப்புகளையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். எல்லாத் தரப்பு மக்களும் இருக்கிறார்கள். மற்றபடி வணிகர் சங்கத்தின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் இப்படியான வதந்திகளைப் பரப்புகிறார்கள்.

தற்பொழுதைய திமுக ஆட்சி வணிகர்கட்கு அதிக அளவில் சலுகைகள் புரிந்துள்ளதாக கூறுகிறார்களே? நீங்கள் ஏன் ஆட்சியில் இருப்பவர்களுடன் எதிர்ப்பு அரசியல் நடத்துகின்றீர்கள்?

திமுக கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது 5,250 கோடிதான் சிறு வணிகர்களால் அரசுக்கு வருமானம் வந்தது. அதை அதிகரிக்க சில யோசனைகளைச் சொன்னோம். சில வரிச் சலுகைகளைக் கேட்டோம். சில பொருட்களுக்கு வரி விலக்கு கொடுத்தார். நாங்கள் கேட்ட பெரும்பாலான கோரிக்கைகளை எல்லாம் கலைஞர் நிறைவேற்றினார். அடுத்த வருடமே அரசுக்கு சிறு வணிகர்களால் 8,150 கோடி ரூபாய் வருமானம் வந்தது. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் கூட கலைஞர் ‘‘அதிகாரிகளின் ஏட்டுக் கணக்கு பொய்த்து விட்டது. இந்த வியாபாரிகளின் மனக் கணக்குத்தான் வெற்றி பெற்றது’’ என்று பேசினார். இதெல்லாம் நடந்தது தேர்தல் நெருங்கிய நேரத்தில்.

இந்த முறை அவர் ஆட்சிக்கு வந்த பிறகு இன்றைக்கு வரை கலைஞரை சந்திக்க முயற்சிக்கிறேன் ஆனால் சந்திப்பதை தவிர்க்கிறார். அவர் எங்களுக்கு நிறைய செய்து விட்டதாக நினைக்கிறார். கலைஞர் செய்தது எனக்கல்ல. மக்களுக்குத்தான் செய்தார். தவிரவும் வணிகர் சங்கம் எந்த கட்சியையும் வெளிப்படையாக ஆதரிக்காது. நமக்கு நல்லது செய்திருக்கிறார் என வியாபாரிகள் யாரை நினைக்கிறார்களோ அவர்களை நாங்கள் ஆதரிப்பது கூட வணிகர் நலன் சார்ந்த நோக்கில்தானே தவிர கட்சி சார்பு அதில் இருக்காது. அதனால் தமிழகம் முழுக்க சென்ற சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் நடுநிலை வகித்தோம். எங்கள் கோரிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களை நாங்கள் ஆதரிப்போம் என்றோம்.

கோக் பெப்சியை விரட்ட வேண்டும். வணிகத்தில் ஏக போக முதலாளிகளை ஒழிக்க வேண்டும் இதெல்லாம் எங்கள் கோரிக்கைகள். இந்த கோரிக்கைகளை வைத்தால் அவர் திமுகவை எதிர்ப்பதாக நினைக்கிறார். அதாவது வணிகர் சங்கம் திமுகவின் ஒரு கிளை அமைப்பாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

அரசாங்கம் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த இருக்கும் சில திட்டங்களை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டு அந்த திட்டம் பற்றி ஒப்புக்கு கோரிக்கை வைப்பதும் அத்திட்டம் தானாக நிறைவேறியவுடன் முதல்வரைச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவிப்பது ஜால்ராக்கள், எடுபிடிகள் செய்யும் வேலை. அதையே நானும் செய்ய முடியாது. அரசுக்கு ஆதரவாக இருப்பது மிகவும் சுலபம். அரசியலோடும் கொள்கையோடும் இன்று எதிர்ப்பரசியல் நடத்துவது மிகவும் கடினம்.

keetru.com